அமைதி காக்க
அமைதியை காக்க வேண்டி
அரும்பாடுபட்டு அனுமதியுடன்
படைதனை அமைத்த பின்பு
பயன்பெறும் வகையில் பயணிகளை
பாதுகாப்பு சோதனை செய்தபின்
பறப்பதற்கு அனுப்பும் கால்
பகைவனும் அனுமதி பெற்று
பறந்து பாமரர்களை அழிக்க
பாரினில் நிகழும் இக்கொடுமை
பயம்தனை மனதில் தூண்டி
பரமன் அருள் வேண்ட மனம் விழையுதே