கவிதையான கவிதை

ஒருவர்:

தன் பார்வையை
பிறர் விழிகளில் நுழைப்பது...

தன் சிந்தனைகளை
பிறர் மூளைக்குள் ஏற்றுவது...

தன் எண்ணங்களை
பிறர் மனதில் விதைப்பது...

தன் மொழியை
பிறர் இதழில் சேர்ப்பது...

தன் சுவடுகளை
பிறர் வழியில் பதிப்பது...

அர்த்தம் புரியும்போது தான்
வார்த்தைகள் கூட
கவிதையாகின்றன....!!

படைப்பவன் கவிஞனாகிறான்!
ரசிப்பவன் கலைஞனாகிறான்!!

கவிதையை பொருத்தமட்டில்
இருவரும் சமமே....!!

எழுதியவர் : ரியாதமி (30-Mar-16, 9:34 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே