தூரிகை

தூரிகை பேசும் மொழி ஓவியம்,
தூரிகையில் தோன்றும் பல காவியம்.

தூரிகை - மனிதனை ஓவியனாக்கும்
மகா சக்தி .

தூரிகை - வர்ணங்களை ருசிக்கும்
வாழ்க்கையைச் சமைக்கும் .

தூரிகை - கண்களை மயக்கி
மூளையைத் திறக்கும் .

தூரிகை - மனதை தூய்மைப் படுத்தும்
மாயத் துடைப்பம் .

தூரிகை - கற்பணையை ஆழப்படுத்தும்,
ஆழ்துளைக் கருவி .

தூரிகை - கோடி மொழிகள் கூரமுடியாததை
ஒரு துளியில் கூறிவிடும் ஞானி.

தூரிகை - இதன் முனையில் தோன்றுவது
ஓவியம் மட்டும் அல்ல வாழ்வியலும் தான் .

தூரிகை - இதைக் கண்டெடுத்தவன் கடவுள் அல்லன் அதற்கும் மேல் .

எழுதியவர் : vanikumar (4-Apr-16, 1:06 pm)
Tanglish : thoorikai
பார்வை : 539

மேலே