புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம்

சாயிராம்!
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திற்குள்ளே பல இடங்களில், சிறு கோவில்களும், தனியாக தெய்வச் சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் அங்கு இருந்தபோது , ஒவ்வொன்றையும் பற்றி ஒரு சிறு பாடல் வடித்தேன். ஒவ்வொரு பாடலோடும், அந்த உருவச்சிலைகளின் புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். இந்தப் பதிவிலும், இன்னும் சில பதிவுகளிலும், அவற்றைப் பகிர்ந்து கொள்வேன்.

இந்த முறை, பிரதான வாயிலுக்கு முன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிள்ளையாரைப் பற்றியும், அதற்கு சற்று அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோவிலப் பற்றியும்..


பிரசாந்தி நிலையத்தின் நுழைவாசல் முன்னமர்ந்து

அரசாளும் ஆனை முகனை - சிரம்தாழ்த்தி

பணிந்து வணங்கிப்பின் துணிந்திடும் காரியம்

கனிந்திடும் இதுஉறுதி காண்!



SUBRAMANIYAR




வலக்கையில் வடிவேலும் இடக்கையில் குக்குடமும் *

துலங்கும் நீர்நிறை நெற்றியும் - சிலம்பணிந்த

பொற்பாத மும்கொண்ட பாலனைத் தொழுதிடுவோர்

உற்பாதம் அனைத்தும் விலகும்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம் ) (5-Apr-16, 12:10 pm)
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே