மாய கனவு

சொர்க்கம் நோக்கி
என்னை மெல்ல
நடத்தி சென்ற
இறைவன்
சற்று அமர சொன்னான் !
ஏனென்று கேட்க
உன்னுடன்
இவ்வழி செல்ல
உன்னவளும் வருவாள்
அவளுடன் சேர்ந்து
செல்வோம் என்கிறான் !
காத்திருக்கும் வேளையில்
பொறுமையின் இலக்கணம்
உரைக்கின்றான் !
மணித்துளிகள் கரைய
பொறுமை இழந்து
கேட்கிறேன்
அவள் வருவாளா என்று !
சிரித்து கொண்டே
சற்று பொறுத்து கொள்
வந்து விடுவாள்
என்கிறான் இறைவன் !
மணித்துளிகள் கரைந்து
நாட்களாயின !
நாட்கள் கடந்து
மாதங்கள் ஆயின !
இனியாவது வருவாளா
என்று
உரக்க கேட்கிறேன் !
இதோ வந்து விட்டாள்
உன்னவள்
என்று கூறி செல்கிறான் !
நான் திரும்பி
பார்த்து
அதிர்ந்து போனேன் !
வந்ததோ
அவளுக்காய்
உயிரை விட்ட
என்னை போல்
இன்னொரு பைத்தியக்காரன் !!!