அக்கா கவிதை
பல்லியின் வாலசைவில்
படத்திலிருந்தப் பூ சரிந்து
கீழே விழுந்தது நல்ல சகுணமென
உணர்ந்து அப்பூவை எடுத்து
கண்களில் ஒற்றித் தலையில்
சொருகி வைத்துக் கொண்டாள்
அக்கா
வெளியூரிலிருந்து கணவன் வரப் போகும்
நேரத்தை நினைத்துக் கொண்டிருப்பாளோ?
*