சிரிப்போம் சிறகடிப்போம்

எங்களைப் பார்... சிரி
எங்களைப் பார்... சிந்தி
கள்ளமில்லா சிரிப்பு
கடைசிவரை இருந்தால்
உள்ளம் மிக மகிழும்
உள்ளவரை சுகம்தான்
தள்ளிவைத்து கஷ்டத்தை
கண்டுக்காமல் விட்டால்
கஷ்டம்கூட ஏண்டா
இங்குவந்தோமென நினைக்கும்
தேவையில்லா குழப்பங்கள்
வேண்டாத கற்பனைகள்
விஷயமில்லா பேச்சுக்கள்
மலிவாய்கிடைக்கும் கிசுகிசுக்கள்
அத்தனையும் அத்துவிட்டால்
இருக்கும்வரை மகிழ்ச்சிதான்
வாழும்வரை சிரிப்பு தான்...
சிரி... சிரிக்கவிடு
நமது புதிய குறிக்கோளாக இருக்கட்டும்....
ஹா.. ஹா... ஹா...