காக்க வாரீர்…

சாயம் உடலில் பூசிடினும்
சாயா அழகுச் சிறுமலர்கள்,
மாயம் மந்திரம் ஏதுமில்லை
மாறா வெகுளிப் புன்னகைகள்,
காயம் மனதில் உள்ளவர்தம்
காமப் பார்வை தனில்சிக்கிக்
காயம் படாமல் காத்திடவே
கணத்தில் வருவீர் கடவுள்களே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Apr-16, 6:06 pm)
பார்வை : 61

மேலே