திருமதிசித்ரா ராஜாசிதம்பரம் பதிவு - ஆதலினால்

திருமதி சித்ரா ராஜாசிதம்பரம் என்ற கவிஞர், சென்னை கொரட்டூரிலுள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆங்கிலத்துறைத் தலைவியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் 13.08.2011 ல் எழுத்து தளத்தில் பதிவு செய்த ஒரு அருமையான கவிதை 'ஆதலினால் ......'.

ஆதலினால் ......
ஓடியிருக்கிறேன் ..
கடமைகள் என்னைத் துரத்த,
காலத்தை நான் துரத்தி
ஓடியிருக்கிறேன் ...

போதும் என்ற
நிலை வந்த போது
நிறுத்தி விட்டேன்..

திரும்பிப் பார்க்கையில்,
கடந்து வந்த பாதையில்
கற்களும்,கற்கண்டுகளும்...

ஓய்வின் போது,
கற்களை ஒதுக்கிவிட்டு,
கற்கண்டுகளை மட்டும்
சுவைப்பதில்,
கவனமாய்த்தான் இருக்கிறேன்!

ஆனாலும்
அப்படி ஒன்றும் இனிக்கவில்லை
இந்த ஓய்வு! அட!
ஓட்டத்தில் உள்ள சுகம்
ஓய்வில் இருப்பதில்லை போலும்!

ஆதலினால் தோழர்களே
ஓடுங்கள் இயன்ற வரை!
இயலாத போது மெதுவாய்
நடக்கவாவது செய்யுங்கள்!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (10-Apr-16, 6:28 pm)
பார்வை : 39

மேலே