தமிழ் கவிதைகள்
தமிழ் கவிகள்
ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம் ஆயிரம்!
எரியும் விளக்கின்
எண்ணையை போலதாம் அவைகள்!
இருள் சூழ்ந்த நம் வாழ்வில்
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை!
தமிழனை ஆட்சி செய்ய
தமிழன் அவசியம் இல்லை!
தமிழ் மொழியும்
தமிழர்தம் மரபும் அறிந்திடல் வேண்டும்!
சிந்தையினில் பாரதியின் வரிகளை
இந்த வேலையினில் மறவோம்
சாதிகள் இரண்டே! ஒன்று
மேலோர் மற்றொன்று கீழோர்!
நீதிநெறியிலின்று பிறர்க்கு உதவும்
நன்னெறி கொண்ட மேலோர்களை
தலைவர்கள் ஆக்குவோம்!
கீழோர்களை ஒதுக்குவோம்!