அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து, 1963 ல் வெளிவந்த ’அறிவாளி’ திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராசன் திருக்குறளின் சிறப்பு பற்றி பாடும் எழுச்சிமிகு பாடல்.

பாடலாசிரியர் கவிஞர் அ.மருதகாசி ஆவார். கேட்கக் கேட்கத் திகட்டாது.

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!
உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே!
பயிருக்கு மழை போலே! பைந்தமிழ் மொழியாலே!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெரும் நினைப்பாலே!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!
மனம்மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது!
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது! - எம்
மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது!
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே! - வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

எழுதியவர் : கவிஞர் அ.மருதகாசி (11-Apr-16, 11:03 am)
பார்வை : 347

மேலே