ஏனோ

நான் பிடிக்கும் மீன் மட்டும்
ஏனோ செத்து மடிகிறது
நான் வளர்க்கும் பிராணி மட்டும்
ஏனோ பயந்து ஓடுகிறது

நான் வைக்கும் செடி மட்டும்
ஏனோ வாடி வதங்குகிறது
நான் பறிக்கும் மலர் மட்டும்
ஏனோ சூம்பிப் சுருள்கிறது

நான் பார்க்கும் காட்சி மட்டும்
ஏனோ பிழையாய் போகிறது
நான் காணும் கனவு மட்டும்
ஏனோ பொய்த்துப் போகிறது

நான் சுவைக்கும் தேன்துளி் மட்டும்
ஏனோ கசந்துப் போகிறது
நான் கலக்கும் பழச்சாறு மட்டும்
ஏனோ பாழாய் போகிறது.

நான் வணங்கும் உறவு மட்டும்
ஏனோ விலகிப் போகிறது
நான் பேசும் வார்த்தை மட்டும்
ஏனோ பழியாய் போகிறது

நான் வைக்கும் அடி மட்டும்
ஏனோ தடுமாறிப் போகிறது
நான் செய்யும் செயல் மட்டும்
ஏனோ தவறாய் போகிறது

நான் போற்றும் நட்பு மட்டும்
மனதை இதமாக்கி போகிறது.
நான் எழுதும் வரிகள் மட்டும்
நெஞ்சை லேசாக்கிப் போகிறது.

எழுதியவர் : சுபாசுந்தர் (10-Apr-16, 11:56 pm)
Tanglish : eno
பார்வை : 409

மேலே