படம் பார்த்து எழுதிய கவிதை கவிஞர் இரா இரவி நன்றி பாக்யா வார இதழ்

படம் பார்த்து எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

அறம் செய்ய விரும்பு என்றால்
அவ்வை நாம் மரம் நடுவதும்
அறமே !

அம்மா அடிக்கமாட்டாள்
வேண்டாம் அச்சம்
செடியை நடு !

ஆடு மேய்ந்துவிடுமோ ? என
அஞ்சாதே விதைத்திடு
வேலி கட்டலாம் !


மரம் நடுவோம் ! அளவோடு
மழை பெறுவோம் !
மானுடம் காப்போம் !

வெப்பமயமாதலைத் தடுக்க
விவேகமான வழி
மரம் வளர்த்தல் !

வேண்டாம் சந்தேகம்
வளருமா ? என்று
வளர்ப்போம் நீர் விட்டு !

வருங்காலத் தலைமுறையும்
வளமாக வாழ்ந்திட
வளர்ப்போம் மரம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Apr-16, 8:50 am)
பார்வை : 106

மேலே