சிற்பியும் சிந்தனையும்
ஒரு போதும் தவறாமல்
சிலையாகி விடுகிறது!
சிற்பியின் சிந்தனை!!
உளி கொடுக்கும்
வலி பொறுத்து
சிலையாகும் கல்லெல்லாம்
சிற்பிக்கு வாய்த்த
சிறப்பான பரிசுகள்!
பாறைகளெல்லாம்
பாவைகளாக்கும்!
கல்லிலும் கூட
கடவுளை எடுக்கும்!
சிற்பியின் சிந்தனை!!
சிற்பியின்
உளி தீட்டும்
உயிரோவியம் கண்டால்
ஊமை விழிகளும்
வியப்பை மொழியும்!!...