பிரியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 22-Jan-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 10 |
நான் முதுகலை அறிவியல் மாணவி. கவிதை எழுதுவதில் எனக்கு rnஆர்வம் அதிகம். கவிதைகளை வாசிப்பதும் ஆர்வம்.rnநிறைய கவிதைகள் எழுத வேண்டும்.
உலகிற்கு என்னை
அறிமுகமாக்கி,
உலகையே எனக்கு
உறவுமாக்கிய என்
முதல் தோழி!
கருவறை நாட்களில்
கருத்துடன் காத்து-என்னை
பிறப்பிக்கும் பொருட்டு
புதுபிறவி கண்டாய்!!
தள்ளாடிய என்
தளிர்நடைக்கும்
புரியாத என்
புது மொழிக்கும், நீயே
முதல் 'இரசிகை'!
வீட்டுக்குள் கவனிப்பில்
அன்பையும்
வெளியில் கண்டிப்பில்
அக்கறையையும்
தெளிக்கும் உன்
மொழிகள்!!
எந்தன் கண்ணில்
தூசு கண்டால்,
உந்தன் கண்கள்
கலங்கிவிடும்!
என் விருப்பங்கள்
எல்லாம் உன்
விரல்நுனிக்குள்!
என் கனவுகள்
எல்லாம் உன்
கண்களுக்குள்!!
உறவுகள் விலகி
உரிமைகள் சிதறி
பெண்மையின்
அழகினை பறைசாற்ற,
புருவமத்தியில்
சிரித்து நிற்கும்
சிவந்த நிலா!...
ஒரு போதும் தவறாமல்
சிலையாகி விடுகிறது!
சிற்பியின் சிந்தனை!!
உளி கொடுக்கும்
வலி பொறுத்து
சிலையாகும் கல்லெல்லாம்
சிற்பிக்கு வாய்த்த
சிறப்பான பரிசுகள்!
பாறைகளெல்லாம்
பாவைகளாக்கும்!
கல்லிலும் கூட
கடவுளை எடுக்கும்!
சிற்பியின் சிந்தனை!!
சிற்பியின்
உளி தீட்டும்
உயிரோவியம் கண்டால்
ஊமை விழிகளும்
வியப்பை மொழியும்!!...
அதிகாரம் கூட
அடிபணிந்து நடக்கும்!
செல்லமாய் மிரட்டும்
சிறுமியின் முன்னால்!!
பிடிவாதம் கூட
பிடித்த குணமாகும்!
மிட்டாய்க்கு போராடும்
குழந்தையின் அருகில்!!
பொம்மைகளுக்கும்
உயிர் கொடுத்து
உறவாடும் உன்னதம்!
மழலையின் உலகம்!!
ஓய்வின்றியே ஓடிடும்
கால்கள்!
தொய்வின்றியே தேடிடும்
கண்கள்!!
மழலையின் இதழ்தெறிக்கும்,
இசைச்சிரிப்பின் இனிமையில்
இசை கூட கசக்கும்!!
மழலை பேசும்
கொஞ்சல் மொழிகள்
புரியாததொரு
புதுக்கவிதையாகும்!!...
இதயத்தின்
காயத்தில்
இதமாய்
இறகொன்று
வருடுதல் போலே,
சோகம் கலைந்து
சுகம் கொள்ள
வைக்கும்
சுவையான ராகம்!
தாயாய்
தாலாட்டிடும்!
தோழமையுடன்
துன்பம் துடைக்கும்!
அன்பான
வரிகளால்,
அழகாய் என்னை
தேற்றி விடும்!!...
காலை விழிப்பில் நான்
கேட்கும் முதல் வாழ்த்து-என்றும்
உன்னுடையதே!
சின்ன சண்டையோ
செல்லச் சண்டையோ முதலில்
மன்னிப்புக்கோரி
மனதை மகிழ்விப்பது நீதான்!
திட்டுவாங்குவதற்காகவே
திறமையாய் நடிப்பவன் நீ!-என்னிடம்
அடிவாங்குவதில்
ஆனந்தம் உனக்கு!
வீட்டில் என்னைப் போட்டுத் தருவதில்
வில்லன் நீ!
அறிவுரை சொல்லி சிலநேரங்களில்
அழவைத்தாலும் - என்னை
ஆழமாய் யோசிக்கவைப்பவன் நீ!
என் குறும்புகளை
நேசிக்கும் அப்பா நீ!
என் தவறுகளைக்
கண்டிக்கும் அம்மா நீ!
என்னை
இளவரசியாக்கி
இன்பம் காணும் என்
அண்ணன் நீ!
கவலைகளின் போது - என்
கரம்பிடித்து தூக்கிவிடுபவன் நீ!
வாழ்க்கைப் பாதையில் எனது
நடைவண்ட
உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்