Nesa Malar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Nesa Malar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 0 |
மின் சமிக்ஞைகள்
நாற்சந்தியில்
மூன்று வண்ணங்களில்
நிறம் மாறி மாறி ஒளிர்ந்தன....
0
0
சிவப்புக் கண் வெடிக்க
வாகனங்கள்
வரிசை முறையை
அனிச்சையாய் அமல்படுத்தின...
0
0
அறுபது நொடிகள்
பொறுக்க முடியா
அவசர மனங்களை
அமைதியின் வழி
அச் சமிக்ஞைகள்
ஏதோவொரு விதத்தில்
கட்டுப்படுத்தியிருந்தன...
0
0
வெள்ளைக் (எல்லைக்) கோட்டையும்
தாண்டிய நிலையில்
தன் அவசரங்களை
அம்பலப்படுத்தினர் சிலர்...
0
0
வரிசையின் ஊடாக
ஊடறுத்து ஊர்ந்தபடி
இரு சக்கர வகனமோட்டிகள்
அவசரத்தில் முதலிடம் பிடிக்க
முந்திக் கொண்டனர்.....
0
0
பரபரத்துக் கிடந்தன
அத்தனை கண்களும்
பச்சை சமிக்ஞையின்
கண் திறப்பிற்காக...
0
0
அப்பாவியாய் காற்றிலலையும்
சவர்க்காரக் குமிழானேன்
உள்ளிருந்து பார்க்கிறேன்
வெளியிலெங்குமுன் பிம்பம்
வெளியிலிருந்து பார்க்கிறேன்
உள்ளெங்கும் நானே உன் நானே!
-0-
குளுகுளு குமிழுக்குள்ளும்
உன் நினைவுப் புழுக்கம்
சோகத்தால் வியர்த்துக் கொட்டுதடி
உன்னைக் காணாத தாபத்தால்
ஏக்கங்கள் தூபமிட்டு தூபமிட்டு
துக்கச் சிறகுகள் முளைக்குதடி!
-0-
குமிழ்க் கதவு மிக மெல்லியது
திறக்கும் சாவியோ உன்னிடமுள்ளது
பொருள் கொண்டு உடைத்தால்
பொருள் படுமா? இது தகுமா?
அருள் கொண்டு திற அன்பு மடை
இருள் வானத்தை விடியலில் துடை!
-0-
கண்டபடி சுரக்கும் காதல் ஹார்மோன்கள்
கண்டு படிப்பதும் உன் மோகனங்கள்
பல்லில்லாத எறு
கதிரவன் கரையேறி மேற்கில் புகும் நேரம்
இதமான குளிர்காற்று இதழ் நடுக்கம் தருகிறது
சற்று நேரத்தில் வானம் ஊசி மாரி பொழிகிறது
நாமிருவரும் மழையை ரசித்துக் கொண்டிருக்கிறோம்
மழை பிடிக்குமா உங்களுக்கு எனக் கேட்கிறாய்?
குடையிருந்தும் நனைகிறேனே தெரியவில்லையா என கேட்கிறேன்...
மழை பற்றி ஒரு கவிதை கேட்கிறாய்...
"பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழாவோ
பூக்குளியல் நடத்துகிறதே
வானம்.! "
மழைத்தூறல் நசுங்கும் படி கை தட்டுகிறாய்.....
நிலா பிடிக்குமா என்கிறாய்
பிடிக்கும் என்கிறேன்...
அமாவாசை அன்று நிலா எங்கே போகும் எனக் கேட்கிறாய்?
"என் நிலா
வானத்தில் இல்லா நாட்களில்
என்னவளின் கண்களுக்கு
உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்