பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம்
நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் - இன்று
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கன்னி உன்தன் சொந்தம்
காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை என்தன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே
சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என் மேலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே - அது
தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலை போலே
நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் என்தன் சொந்தம்
நெஞ்ச்க் கட்டிலே என்னைக் கொட்டிலே என்தன் யாவும் உன் சொந்தம்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உன்னைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெபுரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

எழுதியவர் : கவி கண்ணதாசன் (18-Apr-16, 6:06 am)
பார்வை : 270

மேலே