கஜல் துளிகள் 3
வானில் மேகக் கூட்டங்கள் காணா நட்சத்திரங்கள்
கலைந்தது மேகங்கள் சிந்தியதோ உதிரங்கள்
கரைத் தொட்டும் தொடாமல் செல்லும் அலைகள்
கரையும் மனத்தோடு என்றும் நகரும் என்நாட்கள்
நூலாடும் நெஞ்சினில் வேல்விழி காண்கையில்
போராடும் தினமதில் நினைவோ நறுமுகையில்
கவடுகளற்று வந்தது உன்மேல் காதல்
சுவடுகளற்று அழிந்தது இன்னும் உறுத்தல்
மடியில் தவழும் தென்றல் மனதிலென்றும்
வடிவங் கொள்ளும் காதல் முற்றும்
- செல்வா
பி.கு: கவடு - கபடம்