காதல் தவிப்பு

நீயில்லா நேரம்
நெஞ்சில் ஏனோ பாரம்
நொடிப்பொழுதும்
நெடுங்காலமாய் தோன்றும்

விடியும் வரை உறக்கம்
விழிகளைத் தழுவ மறுக்கும்
கனவில் உன் நினைவுகள்
கடலலைபோல் வந்து போகும்

உன்னை பார்த்தால் போதும்
உள்ளம் குளிரும்
கண்கள் ஒளி வீசும்
காதல் மொழி பேசும்

மகிழ்ச்சி பரவும் முகம்
மயக்கம் தரும் சுகம்
உன் பார்வை தரும்
வசந்தமெனும் வரம்.

எழுதியவர் : theanmozhi (19-Apr-16, 3:06 pm)
Tanglish : kaadhal thavippu
பார்வை : 94

மேலே