முத்தத்தை பற்றவை - சந்தோஷ்

அங்கே நீ
உன் அலைபேசி
தொடுதிரையில்
என் பிம்பத்தை
தொட்டுத் தடவுகையில்
இங்கே
அமானுஷ்யமாக என்
ஆண்மை சிலிர்க்கிறது.
--
நேற்றைய கூடலின்பத்தில்
நீ ஒன்று மறந்துவிட்டாய்.
என்ன தெரியுமா?
எப்போதும்
என் கரு மீசையில்
பதிந்திருக்கும்
உன் சிவப்பு
உதட்டுச் சாயத்தை
துடைத்துவிடுவாய் தானே..!
--
எனது பயணங்களில்
நீயே எனக்கு ஜன்னல்..!
**

ஆகாயத்தை
நோக்கி
கண்ணடித்து விடு.
சூரியன் வெட்கப்பட்டு
பூமி குளிரும்...
என்னை போல..!

**

அக்னி வெயிலில்
நடந்துச் சென்ற
உன் பாதம் பட்டு
குளிர்ந்த
இந்த மண்
இனி என்னால்
பாடுபொருளாகலாம்.

காத்திரு...
வெயிலை உருக்கி
நிழலாக எழுதுகிறேன்
உன்னை..!
**


ஒரு முத்தத்தை பற்றவை
இந்த இரவை
நான் உனக்கு பரிசளிக்கிறேன்
என்னை உருக்கி..!
உன்னை என்னால் செதுக்கி..!
**

நேற்றிரவு உறக்கத்தில்
கொழுந்தெழுந்து எரிந்தது
உன் நினைவுத் தீ..!
பொறுக்க முடியா
அதி உணர்ச்சியோடு
உடல் விம்பிய கொதியில்
உனை முத்தமிட்டு
உன் நினைவை
கலவிக் கொண்டு
என்னை அணைத்துக்கொண்டேன்..!
என்ன செய்ய.. ?
நீயில்லா காமம்
ஒரு தலை ராகம்..!
**


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (19-Apr-16, 1:30 pm)
பார்வை : 76

மேலே