தேன்மொழி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தேன்மொழி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  17-May-1979
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Feb-2016
பார்த்தவர்கள்:  291
புள்ளி:  19

என்னைப் பற்றி...

கவிதைகள் பிடிக்கும்

என் படைப்புகள்
தேன்மொழி செய்திகள்
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2021 9:28 pm

கவிதை எழுத நினைத்தேன்
கருப்பொருள் இல்லை
கல்லூரி செல்லவில்லை
கல்வி முழுமை பெறவில்லை
உழைக்க தயங்கவில்லை
உடலுக்கு ஓய்வுமில்லை
வருமானம் போதவில்லை
வசதிகள் பெருகவில்லை
வாரிசு குறைவில்லை
கல்விக் கூடங்களில் இடமில்லை
கட்டுமானப் பணியாளராக பிள்ளை

மேலும்

தேன்மொழி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2015 10:52 am

ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ்

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ் மியாவ் மியாவ்............/

வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?

திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா........

மேலும்

😀😀 05-Sep-2021 9:05 pm
😁😁😁 10-Sep-2020 3:14 pm
ஹா ஹா 07-May-2018 8:33 am
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2020 9:56 pm

உள்ளம் முழுதும் துன்பம்
உணவுகள் கசக்கும்
அன்னையை நினைக்கும்
உண்மை சொல்ல துடிக்கும்
உறக்கம் இன்றி தவிக்கும்
பெற்றோரை பார்க்க ஏங்கும்
அனுமதி கேட்க தயங்கும்
கணவனின் முகத்தில்
தாயின் அன்பை தேடும் - அதில்
கணலை கண்டதும் வாடும்
பிள்ளை முகம் பார்க்கும் - அதில்
தன்னை மறந்து கிடக்கும்
தன்னிலை மாற்ற உழைக்கும்
மாறா நிலை கண்டு கலங்கும்
நரை விழுந்த நிலையிலும்
கணவனின் குறை சொல்ல தயங்கும் பெண்மை

மேலும்

தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 8:52 pm

மழை வரும் நேரம்
மனம் முழுதும் தாகம்

குளிர் துளியாய் நீயும்
சுகம் தருவாய் நாளும்

உன் வருகை என்றும்
உளமகிழ்ச்சி பெருகும்

வழி பார்த்து காத்திருக்கும்
விழி இரண்டும் பூத்திருக்கும்

மேலும்

காதல் காலம் கடந்து போனால் கூட அதன் வயது என்றும் 16 இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 11:52 am
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2016 6:51 pm

மங்கையின் விழிகளில்
மன்னவன் கண் பட்டதும்
கதிரவன் ஒளியின்றி
குவிந்திருந்த வெந்தாமரை
சிவந்தது போலும்

மேலும்

நன்றிகள், வாழ்த்துங்கள் என் போன்ற புதியவர்களை வளரட்டும் தமிழ் 20-Nov-2016 4:27 pm
பெண்ணுக்கு அழகு நாணம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Nov-2016 8:05 am
தேன்மொழி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2016 9:31 pm

நினைவுகள் ஏனோ வாட்டியது..,
நீ இல்லாத நிமிடங்களில்..!
கனவுகள் ஏனோ கலைந்தது..,
நீ தோன்றாத கனவானதால்..!
உயிரும் ஏனோ உருகியது..,
உன்னை மறக்க நினைக்கும்..,
'ஒவ்வொரு வினாடியும்'..!
நானும் ஏனோ சிந்தித்தேன்.,
நீ ஏன் இல்லை...
என்னோடு என்று..!
காலமும் சொன்னது 'பிரிவு' எனும் பதிலை..!

மேலும்

பாராட்டுக்கு மிக்க நன்றி!!! 07-Nov-2016 1:59 pm
பிரிவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் காதல் கவிதை நயம் & காதலர் இருவரும் இரட்டைத் தண்டவாளங்களில் பிரிந்து உள்ள ஓவியம் போற்றுதற்குரிய அரிய கவிதை இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் 28-Oct-2016 7:05 pm
பிரிவுகளில் இருந்துதான் புதுமை பிறக்கிறது அந்த புதுமைதான் தோல்வியின் காயத்தை ஆற்றுகிறது... 22-Oct-2016 8:30 pm
நன்றி சகோதரி..! 18-Oct-2016 6:12 pm
தேன்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2016 2:57 pm

தன் கைப்பொம்மையை
தங்கையிடம் இழந்து
தன்னை தேற்ற வழியறியா
தவிக்கும் முதல் குழந்தையைப்போல
காதலை இழந்த
இதயம் துடிக்கும் கடைசிவரை.

மேலும்

தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2016 1:17 pm

கண்கள் சந்திக்கும்
சிறு துளி நேரம்
வாய் திறவா நிலை வரும்
மெய் மறந்து
உயிர் பேசும்
உன்னோடு நான்
கலந்தே இருப்பேன் என்று...

மேலும்

நன்றிகள் 18-Jun-2016 2:34 pm
அழகு....அருமை.. 15-Jun-2016 5:37 pm
திகட்டாத தேன்தான் ... மொழியற்ற மொழிதான் ... காதல்..! 15-Jun-2016 3:29 pm
மனதும் மனதும் மோதிக் கொள்ளும் யுத்தம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jun-2016 2:42 pm
தேன்மொழி - தேன்மொழி மதன்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2016 1:00 pm

இறைவன்
படைத்து
இயல்பு
கெடாமல்
தொடரும்
பட்டியலில்
இன்றும்
இருக்கிறது...

குழந்தையின்
கள்ளம்
கபடமற்ற
சிரிப்பு !!!

மேலும்

உண்மைதான்..மழலை அருகே நிம்மதியான சுவாசம் கிடைக்கிறது 30-May-2016 5:05 pm
தேன்மொழி - PRIYA. A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2011 12:51 pm

இது மாவீரர்களுக்கு தரப்படும் மலர் செண்டு மங்கையின் இதழ்களை விட இனிமையானது

மேலும்

அருமை ரசிக்க இனிமை 14-Feb-2016 8:31 am
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2016 1:28 pm

விடியற்காலை விறகடுப்பில்
சோறு சமைக்கும் அம்மா...

ஏர் கலப்பையை தோளில் சுமந்து
மாடுகளுடன் செல்லும் அப்பா...

நெற்கதிர்களை சுமந்து நிற்கும்
வயலுக்கு நீர் பாய்ச்சும் அண்ணன்...

குருவிக்கூட்டில் முட்டைகளை
எண்ணி பார்த்தும்
குட்டைகளில் தேங்கி நிற்கும்
மழை நீரில் தவழும்
தலைபிரட்டைகளை மீன் குஞ்சுகள்
என நினைத்தும்...

நீரோடையில் குளித்தும்
சாலையோர இலந்தை மரத்தடியில்
உதிர்த்திருக்கும் பழங்களை
எடுத்து தின்றும்.....

விடுமுறை நாட்களில்
மரக்கிளையில் கொடியினால்
ஊஞ்சல் கட்டி ஆடியதும்....

கூட்டான் சோறாக்கி
கூடி உண்டு மகிழ்ந்ததும்

இன்று குழந்தைகளிடம் கூறினால்
சுவரில் மாட

மேலும்

இயற்கை நினைவுகள் இனிமை தேன்மொழி, அருமையான பதிவு - மு.ரா. 27-Feb-2016 4:41 pm
அருமை... 20-Feb-2016 10:40 am
உண்மைதான் காலம் இனிமைகளை அளித்து விட்டது 20-Feb-2016 8:36 am
தேன்மொழி - தேன்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2016 10:41 am

விழித்திருக்கும் நேரத்தில்
கனவிலும்
விழி உறங்கும் நேரத்தில்
நினைவிலும்
உன்னோடு நான்...
சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது
சிலருக்கு வாழ்க்கையே கனவாகிறது
எனினும் காதல் வாழ்கிறது

மேலும்

அருமை, விழித்திருக்கும் நேரத்தில் என்று திருத்தி விடுங்கள் - மு.ரா. 27-Feb-2016 4:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

தேன்மொழி மதன்குமார்

தேன்மொழி மதன்குமார்

கோயம்புத்தூர்
விஜய்

விஜய்

கோவை
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
vinovino

vinovino

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ர த க

ர த க

Chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
vinovino

vinovino

chennai
மேலே