நெஞ்சத்தில் பாட்டெடுத்து

நெஞ்சத்தில் பாட்டெடுத்து
தேன் தமிழில் சொல்லெடுத்து
தாலாட்டு பாடுகின்றேன்
என் பஞ்சு போன்ற நெஞ்சினிலே
உறங்கிட வா மனமே
நீ கண்ணுறங்கும் போதினிலே
காதல் வரும் மனசினிலே
உன் சுருள் கேசம் காணயிலே
சொர்க்கமடா கண்ணுக்குள்ளே
நான் தாலாட்டும் மோக பாட்டு
மோதுமடா நெஞ்சுக்குள்ளே
கொஞ்சும் கிளி பாடயிலே
கொஞ்சுதடா மனசுக்குள்ளே
பொன்மேல ஆசைவிட்டு என் மேல ஆசை வைத்தாய்
கானக்குயில் பாட்டை கேட்டு
காதலிலே பாசம் வைத்தாய்
நெஞ்சோரம் பாடுகின்றேன்
தாலாட்டும் தென்றல் வைத்து
தூங்காத கண்ணிரண்டும்
தேடுதடா உன் மனசை தொட்டு
பேசாத என் விழிகள் பேசுதடா உன் இதயம் தொட்டு

எழுதியவர் : சௌம்யா செல்வம் (25-Apr-16, 12:40 am)
பார்வை : 79

மேலே