ஒரு கதை மக்களால் கருப்பசாமி பற்றி
🌺🌺 ஶ்ரீ கருப்புசாமி 🌺🌺🌺🌺🌺🌺.
தர்ம சாஸ்தா அய்யப்பனின் முதன்மைக்காவல் தெய்வம் ஆவார் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராம கோயில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்..
தமிழ்நாட்டு கிராம தெய்வங்களில் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக ஊரை காவல் காப்பவராக கால்நடைகளை காப்பவராக கருப்புசாமி இருந்து வருகிறார்.
அடர்ந்த மீசையுடன், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பசாமி.
உயரமான உருவமும், கருத்த உடலும் வேகமான ஓட்டமும், துடிப்பான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது.
தென் தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவல் புரிபவராக ஆட்சி செய்கிறார்.
🌺கருப்பசாமி வரலாறு:🌺
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள்.
திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று வெளியே உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார்.
குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன் மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம்.
அது முதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கருப்பசாமி பற்றி கூறப்படுகிறது.