அவள் கனவுகளோடு

அ என்பது தமிழ்மொழியின் முதலெழுத்து
ம்மா என்பது என் வாய்மொழியின் முதலெழுத்து
தாய்பாலில் உயிர் தந்தவள் அவள்
தலையணைக்கே உறக்கம் தந்தவள் அவள்
கை பிடித்து நடக்க செய்தவள் அவள்
கால் பதித்து நடக்க சொன்னவள் அவள்
கண்ணுக்குள் வைத்து வளர்த்தவள் அவள்
கண் இமையாய் காவல் காத்தவள் அவள்
ஓர் அணுவாய் மட்டுமே இருந்த எனக்கு
நெஞ்ச துடிப்பு கொடுத்து வடித்தவள் அவள்
அவள் துணை இன்றி வாழ்வில்லை
கடைசி வரை வாழ்வில் தாழ்வில்லை
என்றிருந்த என் உலகம் விட்டு
என் உயிர்மூச்சில் கலந்துவிட்டு
என் நினைவில்மட்டும் நிறைந்துவிட்டு
மனத்தாங்கலை மட்டும் விட்டு விட்டு
காற்றோடு காற்றாய் கலந்துவிட்ட
காலச்சுவடுகளில் பதித்து விட்ட
அவள் நினைவில் அவள் கனவுகளோடு
உயிர் தாங்கி வாழ்பவள் இவள்.

எழுதியவர் : சுபா சுந்தர் (28-Apr-16, 7:20 pm)
Tanglish : aval kanavugalodu
பார்வை : 289

மேலே