கவிதையே ஆறுதலாக........

பிறவிப் பெரும் பிணியில்,
புற்றாய் காதல் வளர,
முற்றாக செல்லரித்தப் பின்,
காற்றடைத்த பையும்,
காதலுடன் காமமும் தளர...
உன்னுடைய மறதி – என் பிணி...
என்னுடைய மறதி – பிணிக்கு மருந்து...
ஆற்றாமையின் அடிச்சுவட்டில்...
கவிதை எழுதினேன்...
தொடர் துயரங்களின்...
ஒரே ஆறுதலாக........