கவிதையே ஆறுதலாக........

பிறவிப் பெரும் பிணியில்,
புற்றாய் காதல் வளர,
முற்றாக செல்லரித்தப் பின்,
காற்றடைத்த பையும்,
காதலுடன் காமமும் தளர...

உன்னுடைய மறதி – என் பிணி...
என்னுடைய மறதி – பிணிக்கு மருந்து...

ஆற்றாமையின் அடிச்சுவட்டில்...
கவிதை எழுதினேன்...

தொடர் துயரங்களின்...
ஒரே ஆறுதலாக........

எழுதியவர் : ரமண பாரதி (20-Jun-11, 1:07 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 457

மேலே