அம்மாவை உதைக்காதே

அன்பு மகனே!
அழகு மகனே!
பாச மகனே!
பவள மகனே!

அன்றென் வயிற்றின்
உள்ளிருந்து உதைத்தாய்
தாங்கும் பலமிருந்தது அப்போது...

இன்றென் வயிற்றின்
வெளியிருந்து உதைக்கிறாய்
தாங்கும் பலமில்லை
இப்போது...

வேண்டாம் மகனே
இப்பாவம் உனக்கு வேண்டாம்...
***

-முகம்மது பர்ஸான்.

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (3-May-16, 3:25 pm)
பார்வை : 267

மேலே