துயர்களைச் சாய்ப்பாய்

பனித்த விழியால் பரமனை வேண்ட
இனிதே வருவான் இடர்களை ஓட்ட
கனிவாய் அழைக்கக் கருணையும் கொண்டே
தனித்த மனத்தின் தவிப்பினைத் தீர்ப்பான் !

பதியுன் திருத்தாள் பற்றிடு வோமே '
கதியும் நீயே கண்திற வாயே
விதியை மாற்றி வினைகளைத் தீர்ப்பாய்
துதிக்கும் அடியார் துயர்களைச் சாய்ப்பாய் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-May-16, 12:22 am)
பார்வை : 60

மேலே