நின்னை சரணடைந்தேன்
நின்னை தரிசிக்க வரும் வேளையில்
மனதில்
ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகளும்
ஏக்கங்களும்
எண்ணங்களும்
மகிழ்ச்சிகளும்
ரெக்கை கட்டி
பறந்து
விரைந்து
நின்னை
நோக்கியே
உயிர்
ஓடும்
நேரம்
எனை கொல்லும்
எப்பொழுது
உனை காணபோகிறேன்
என்றே
மனம் தவிக்கும்
நின்னை
பார்த்த வேளை
ஓடி வந்து
தழுவிக்கொள்ளும்
உயிர்
இப்படியே
யுகங்கள் யுகங்களாக
இருந்துவிடக்கூடாதா
என்றே ஏங்கும்
நின்னை விட்டு
பிரிய வேண்டும்
என்று
காலம் துடிக்கையில்
உன்னை விட்டு
நான் பிரிய
வேண்டும்
என்று
நினைக்கையிலேயே
என்னை விட்டு
உயிர் பிரிகிறது
உன்னை விட்டு
பிரிந்து வருவது
உடல் மட்டுமே
பேருந்தின் இருக்கையில்
நடை பிணமாக நான்
பேருந்தின் கம்பிகளும்
கண்ணீர் சிந்துகிறது
நீயும்
கண்ணீர் சிந்த
ஆயத்தமாகிடு
~ பிரபாவதி வீரமுத்து