தாயே உனக்காக

உயிர் தந்தாய்
உயர்வைத் தந்தாய்

உணவு தந்தாய்
உணர்வைத் தந்தாய்

உறவு தந்தாய்
உன்னதம் தந்தாய்

பசிக்கு விருந்தாய்
நோய்க்கு மருந்தாய்
நீதான் இருந்தாய்

உன் கருவறையில் இடம் தந்து - எனக்குப்
பெருமை சேர்த்த பெருந்தாய்

ஆகாயம் போல் இருந்து எனைக்காக்க
ஆண்டவன் கொடுத்த அருந்தாய்

நேற்றல்ல, இன்றல்ல, நாளையல்ல
ஏழேழு ஜென்மத்திற்கும்
நீதான் என் தாய்
நான்தான் உன் சேய்.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (8-May-16, 9:43 pm)
பார்வை : 552

மேலே