முரண்

*
சலித்துப் போகிறான் சூரியன்.
காற்றில் உதிர்ந்தன இலைகள்.
அதிர்ந்து ஒலிக்காத முரசு.
தாமரைப் பூக்காத குளம்.
வண்டு புழுத்த மாம்பழம்.
உடைந்துப் போன பம்பரம்.
முற்றாத கதிர்மணிகள்.
பழுதான டி.வி
ஏற முடியாத ஏணி
வீதியை பெருக்காத துடைப்பம்.
என்னய்யா இது?
ஒத்த வரியிலே முரண்.
கண்டு பிடித்து யோசிப்பது தான்
உங்கள் அறிவுத் திறன்.
ந.க.துறைவன்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (9-May-16, 6:18 am)
Tanglish : muran
பார்வை : 137

மேலே