இராமரின் பாதை - வெண்பா

நாளது போன மழையின் சிலிர்ப்பில்
துளிர்த்த சிறுமலர் பாதையில் ஏகி
குறிஞ்சி நிலந்தனை மூவரும் தாண்ட
திடும்திடும் மேளம் ஒலிக்குது நீரருவி
நீர்தரங் கோசை சலசலக்கும் ஆறு
வளைந்த சிறுதுளை மூங்கில்கள் வாழ்த்தொலி
இன்னிசை ஆகுதே காண்..!













(இராமாயணத்தில் இராமர், சீதாப்பிராட்டி, இலட்சுமணர் மூவரும் குறிஞ்சி நிலத்தை விட்டு, எங்கள் மருத நிலப் பாதையில் நடந்து செல்லும்போது காணும் காட்சிகளை 20 வெண்பாக்களில் படைக்க முயற்சி எடுத்திருக்கிறேன். அதன் வெள்ளோட்டம்தான் இந்த பஃறொடை வெண்பா

இதெல்லாம் என்னால் சாத்தியம்தானா என்றிருந்தேன். உங்கள் கருத்து உற்சாகத்தில் சாதிக்கிறேன். சாதிப்பேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (11-May-16, 9:14 am)
பார்வை : 548

மேலே