எந்நாளோ - பஃறொடை வெண்பா

பசும்பயிர் வாட பசுமையும் ஓட
மழையது மாயையாய்ப் போகுதே ஏனோ..?
எனக்குள் எழுகுது கானல் கவிதைகள்.
ஏனோ இதயத்தில் ஈர்ப்பும் குறைய,
இளைஞன் இவனது வாழ்க்கை இறங்குமுன்னே
ஏர்த்தொழில் விட்டே புதுத்தொழில் தேடி
இணைகின்ற நாளெந்த நாள்..?

எழுதியவர் : க,அர.இராசேந்திரன் (24-May-16, 1:55 pm)
பார்வை : 157

மேலே