அன்னை

பேரு காலத்தில்
பெற்ற வலிகளெல்லாம் - நீ
பேர் பெற்ற காலத்தில்
நீங்கிவிடுகிறது!
அவள்
முதுமை பெற்ற வலிகளெல்லாம்
உன் இளமை
வாங்கிவிடுகிறது!
பெற்றவளை
பேணும்போதுதான்-மற்றவைகளை
காணமுடிகிறது!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (25-May-16, 10:26 am)
Tanglish : annai
பார்வை : 230

மேலே