காதலுடன் - பாகம் 4

முதல்
முறையாய்
புது உலகம் காண
வெளி வந்தன
துளிர்த்த முல்லை அரும்புகள்......


இயற்கையின் நடுவில்
மரத்தின் அடியில்
நிழலின் மேல் நின்றன
பறவைகளாய்
எங்கள் பாதங்கள்......


அவள்
துப்பட்டாவின்
ஒரு முனை
நிலம் விரித்து
எனை
அமரச் செய்தாள்......


வாசலில்
கயித்துக் கட்டிலில்
தலை சாய்த்து
வானிலவின்
வனப்பு இரசித்தேன்...
அந்நொடிகள்......


பூவின்
மடியில் சாய்ந்து
நிலவென
அவள் முகம் கண்டேன்
இந்நொடிகள்...
புரியாத ஆனந்தம்
என் நெஞ்சினில்......


பனிக்கூழ்
ஒன்று வாங்கி சுவைத்தாள்...
எனக்காகவும்
ஒன்று வாங்கினாள்...
சுவைத்தேன்......


என்
நாவின் சுவை மொட்டுக்கள்
அறிந்திடாத
சுவை அது......


காதலியின்
எச்சில் நனைந்த
பனிக்கூழ்
அது...
சுவை அதிகந்தான்......


தினம்
ஒரு பனிக்கூழ்
அவள்
நுனி நாக்குப் பட்டு
சுவைத்திட
ஆசையும் முளைக்குதே......
காதலுடன்......

எழுதியவர் : இதயம் விஜய் (25-May-16, 12:59 pm)
பார்வை : 212

மேலே