10 செகண்ட் கதைகள் - சத்தியம், தர்மம், நீதி, நேர்மை - ன்னு இருந்த

சத்தியம், தர்மம், நீதி, நேர்மை - ன்னு
இருந்த நாலு பேரு
செத்துப்போனதும்
தூக்கிட்டு போன நாலு பேரும்
மனசை மாத்திக்கிட்டு
வாழ ஆரம்பிச்சாங்க.
நல்லா சுகமாவும் சௌகரிமாகவும்
இருந்ததும்
நம்மளை மாதிரி எல்லோரும் இருந்துட்டா
பூமி தாங்காதுன்னு அவுங்களுக்கு
புரிய ஆரம்பிச்சதும்
புதுசா கட்சி ஆரம்பிச்சு
சத்தியம், தர்மம், நீதி, நேர்மை தான்
வாழ்க்கையில முக்கியம்னு சொன்னாங்க.
இப்படித்தாங்க எங்க ஊரு கெட்டுப்போச்சு.
இப்படி லஞ்சம், லாவண்யம், திருட்டு, கொள்ளை-ன்னும்
எல்லோராலும் இருக்க முடியாம
குழம்பி போய் ஓட்டுப்போட்டுட்டு..
அட. இந்த மாசந்தாங்க..
இவுங்க எப்பவுமே இப்படித்தாங்க..
இருக்கிறாங்க, இருப்பாங்க..
அவங்களைப்பத்தி நீங்க யாரும் கவலைப்படாதீங்க,
ஏன்னா அவங்களுக்கு அது பழகிடுச்சில்ல..

எழுதியவர் : செல்வமணி (30-May-16, 10:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 300

புதிய படைப்புகள்

மேலே