என் கனவு தேவதை

"என் கனவு தேவதை""

சிலந்தி வலைக்குள்
சிக்கிய சிற்றெறும்பாய்
நான் இருக்கையில். ..

என்னை காப்பாற்ற
வானில் பட்டென
பறந்து வந்தவளே....!

நீ யார் என
எண்ணி முடிக்கையில்
எல்லையற்ற வலைகளை
உடைத்தவளே....!

உன்னை பற்றி
எண்ணுகையில் , என்
எண்ணமெல்லாம் சிலிர்க்கிறது....!

கூண்டு கிளிகளாய்
நாங்கள் இருக்க
ஏன் நீ என்னில்
குடிவந்தாய்..?

கூட்டிலிருந்தவர்கள் எல்லாம்,
விட்டு விட்டுப் போக.... நீ மட்டும் ஏன்
எட்டி பார்த்தாய்...?
விட்டு போகவா ,,,! இல்லை
தொட்டு தொடரவா...!

சர்ப்பம் தீண்டியவன் போல்
சிறிது சிறிதாய் சித்ரவதை
அனுபவித்தேன்....
உன்னை கானும்
முன்பு வரை....!

மின்னலாய் திடீரென ஒளித்தாய்...
மனதில் நிறைந்தாய்....
மகிழ்வை தந்தாய்..

சிறுவயது ஆசைகளை
சித்திரம் போல் நீர் தீர்தாய்..
சின்ன மழலை போல்
கள்ளமில்லா சிர்ப்பில்
என் நெஞ்சையும் கரைத்தாய்...

நினைவிலும் எண்ணவில்லை..
என்றும் நீ என் நிழலாய் வருவாய் என்று. ....

கனவிலும் கானவில்லை
கண் எதிரே வருவாய் என்று. ...

காத்திருக்கிறேன் ....
காலம் முழுவதும்
கை பிடித்து
துணை வருவாய் என்று. ...

அடி என்னவளே
அன்று வந்த நீ என்று என்னில் வருவாய். ...!

மறந்துவிடாதே...
காத்திருப்பது நான் மட்டுமல்ல ....
என் காதலுடன் கூடிய இந்ந கவிதையும் தான்....

எழுதியவர் : vibgyor (5-Jun-16, 4:57 pm)
பார்வை : 1408

மேலே