பட்டினி வண்டு நோக்காது
உற்று நோக்கினான்
சுற்றும் பார்த்தான்
பாதி தீர்ந்திருந்தது
வயிரோ காத்திருந்தது
உள்ளே சிறுவண்டு
எப்படியோ மாண்டிருந்தது..
லாவகமாய் சிறுவிரலால்
வெளியே எடுத்து போட்டுவிட்டு
மீதி இருந்த உணவையும்
ஒரு பருக்கையின்றி உண்டான்
மூன்று நாட்களாய்
பட்டினி கிடந்தவன்..