ஆனந்த மழை

பூமிக்கெல்லாம் மகிழ்ச்சி கொடுத்தால்
பேருவகை தான் இந்த மழை
பூவுக்கெல்லாம் சிரிப்பு கொடுத்தால்
பெரும்பாக்கியம் தான் இந்த மழை

நேற்றைய கஷ்டம் மறக்க வைத்தால்
நாளையை நன்றாய் விடிய வைத்தால்
இன்றை இனிதாய் கழிக்க வைத்தால்
இனிய நண்பனே இந்த மழை

மழைக்கு இல்லை பேதம் ஏதும்
மழைக்கு இல்லை வேதம் ஏதும்
மழைக்கு இல்லை பிரிக்கும் குணமே
மழைக்கு இல்லை வெறுக்கும் மனமே

மழையை பார்த்தால் மனதில் ஆனந்தம்
மழையில் நனைய உடைகள் ஆனந்தம்
மழையுடன் பேசிய நாட்கள் ஆனந்தம்
ஆனந்த மழையாய் எல்லாம் ஆனந்தம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jun-16, 2:16 pm)
Tanglish : aanantha mazhai
பார்வை : 1821

சிறந்த கவிதைகள்

மேலே