என்அவள்

மலை முகடுகளில்
மழை மேகங்கள் தழுவுவது போல்
உன் மலர்முலைமேல்
கார்கூந்தல் தழுவி தழுவி அலைபாயுதே....

மின்னல் ஒருநொடி
என்னுள் பாய்ந்து செல்வதுபோல்
உன் மையல் விழிகள்
என் உயிர் உருக்கி உறிஞ்சிடுதே...

உன் சுவாசக்காற்றில்
துளிர்விடும் என் மோகமொட்டுக்கள்
பொங்கிபெருகும் என்
ஆண்மையின் எல்லையில் ஆர்பரிக்குதே...

காதுமடல் ஓரத்தில்
குறுமுடியின் வாசம் என்னை வதம்செய்யுதே
உன் கன்னக்குழியில்
ஒரு குட்டிசொர்க்கம் தெரியுதே...

நாணல் போல் அசைந்தாடும்
இடையை கண்டு
என்மீசை முருக்கேருதே உன்னை
'கட்டிக்கொள்ள' மனமும்
ஏங்கித்தவிக்குதே என் அழகிய சீமாட்டியே...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (12-Jun-16, 10:29 am)
பார்வை : 359

மேலே