10 செகண்ட் கதைகள் - சாதிக்க
ஒரு ராஜா அவரோடு தளபதிக்கு வயதாகிவிட்டது என்று வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செய்தார் .
இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தார்கள் ராஜா தகுதி உள்ள எல்லோரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி இந்த கோட்டைக்குள்ள
பின்பக்கத்தில பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு அதோட கதவு நல்ல கனமான உலோகத்தால் செஞ்சது .
இதுவரைக்கும் யாராலையும் அதை திறக்க முடியவில்லை. என்று அப்படி இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு .
இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க
அவர்களாலேயே திறக்க முடியல நம்மால் எப்படி முடியும்னு பாதி பேர் கிளம்பிட்டாங்க .
இதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சிருச்சு ராஜா 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிட்டு போனார் .
எல்லோரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுட்டு இருந்தாங்க
இந்த கதவை திரப்பவருக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா
எல்லோரிடமும் கூறினார் .
கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்று முன்வராமல் தயங்கினர்
ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வச்சு தள்ளி பார்த்தான் அட
என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு .
பல பேர் தயங்குவதனாலும் ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல்
இருக்கிறது தான் முதல் கோழைத்தனம் என்றார் ராஜா அவனையே பாரட்டி தளபதி பதவியே வழங்கினார்.
..அது முடியாத காரியம் என எப்போது உன் காதுகளில் யாராவது
சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்துகொள் நீ சாதிப்பதற்கு அருகில்
வந்து விட்டாய் என்று.