அழகிய தமிழ் மகள்

பைந்தமிழ் சுவையே பட்டு ரோசா இதழே
பைத்தியமானேன் வைத்தியம் நீயே

இழுக்கிறது உன் இதழ்களின் கோடுகள் - உன்
இதழ் இரண்டும் என் கவிதையின் ஏடுகள் – அதில்
எழுதிட என் இதழ் படும் பாடுகள் – நீ
இமையாலே தடை சொல்லும் தமிழ் நன்னுதல்

விழியை திறந்துவிட்டாய்
திரியை ஏற்றிவிட்டாய்
எரிகிறதென் இதயம்..

குளிரவைக்கும் மழையே – நின்
விழி இரண்டும் கார்மேகமே
விழியா அலையா என்று
விழிக்கும் என் இதயம் இன்று – அதை
விளக்கிடு துளி நேரம் நின்று...

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (17-Jun-16, 12:38 pm)
பார்வை : 155

மேலே