சமத்துவம் மலரட்டும்​ சமுதாயம் வாழட்டும்

சாரல்மழை பொழிந்தது
சலசலவென ஒலித்தது
சாளரம்வழிக் கண்டேன்
சஞ்சலங்கள் கரைந்தது
சாந்தமானது மனதும் !

சரிகமபதநி ஒலித்தது
சஞ்சய்யின் சாரீரமது
சரீரத்தை குளிர்வித்தது
சலனங்கள் கரைந்தது
சர்வமும் மகிழ்ந்தது !

சத்தமிகு சந்தையதில்
சகலவித ஒலிக்கலப்பு
சமூகநீதியை காத்திடும்
சமன்பட்ட சமுதாயமாக
சமநிலையில்​ ​நுகர்வோர் !

சாதிசமயம் துறந்திட்ட
சச்சரவுகளை மறந்திட்ட
சந்தர்ப்பவாதம் ​மரணித்த ​
சமத்துவம் மலரட்டும்
​​சமுதாயம் வாழட்டும் !​​

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Jun-16, 8:37 am)
பார்வை : 158

புதிய படைப்புகள்

மேலே