என்றும் உன்னோடு நான்

பூரண சந்திரனும் கடலோடு உரச
கடல் அலைகளும் நம் காலோடு உரச
உன் உதடுகளும் என் கன்னம் உரசியதே

மழை முகில்களும் வானிலே நடை போட
நண்டுகளும் மணலினிலே ஊர்வலம் போக
உன் விரல்களும் என் மேனியிலே நடனமாடியதே

பூக்களின் இதழ்களும் புன்னகையோடு
மலர்கின்றன வண்டுகளும் தேன் சுவைக்க
இலை உதிர்ந்த மரம்களும் கிளை கொடுத்து உதவுகின்றன
குருவிகளும் கூடு கட்டி இனிதாக இன்பம் பெற
என் இதயமும் இடம் கொடுக்க மறுத்ததில்லை
உன் விம்பம் செதுக்கி வெளிச்சம் கூட்ட

கடல் நீரில் உவர்ப்பும் கலந்து இருப்பதால் கங்கை நீரும் மறுப்பதில்லை கடலோடு சேர
காமமும் என்னை கண்டு பயந்ததில்லை
நானும் ஓர் உத்தமன் என்றதால்
பார்வையில் நான் குருடானாலும்
என் பாசத்தில் நனைய நீ மறுத்ததில்லை

என்றும் உன்னோடு வாழ்ந்திடுவேன்
என் வாழ்க்கையும் முடிவினை
காணும் வரை

எழுதியவர் : பயாஸ் அஹமட் (23-Jun-16, 6:48 pm)
Tanglish : endrum unnodu naan
பார்வை : 227

மேலே