சுழல்வது
பாரதப் போர்கள்
என்றும்
பழங்கதையாய் ஆவதில்லை..
சதிகாரச்
சகுனிகள் தரும்
சங்கடங்கள் தீர்வதில்லை..
பாண்டவர்தம்
வனவாசங்களும்,
பாஞ்சாலி சபதங்களும்
பாரிலென்றும் நிற்பதில்லை..
போர்முனையில்
பேர்தெரியா அப்பாவிகள்
புகழுடம்பு பெற்று
வீழ்வதுவும் நிற்பதில்லை..
சுழல்வது சக்கரமா,
இல்லை
சரித்திரமா...!