கவிப்படம்

உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே வாழ்க்கை

*
*
*
*
*

இடைவேளை

(நடுவே கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் அழுகை
கொஞ்சம் தாகம்
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பக்தி
கொஞ்சம் விரக்தி
கொஞ்சம் நிம்மதி
கொஞ்சம் மகிழ்ச்சி)

*
*
*
*
*


அதில் உண்மை தோற்குமா ? !
பொய்மை வெல்லுமா? !
இது தான் முடிவு .

சுபம் என்று
போட
உண்மை வென்றிருக்கும்

தொடரும் என்று போட
உண்மை வெளிவர தாமதமாகும்
தீமை கோலோச்சியிருக்கும்

*
*
*
*
*
அடுத்த பாகம் (பிறவி)
வளரும்
அதிலும்
அடிபட்டு
மிதிபட்டு
உடைபட்டு
இறுதியில்
பரவசம்
உயிர் ஜோதி
இரையும்
இறையில்

இது தான்
நல்ல முடிவு
இறுதி முடிவு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Jun-16, 6:30 am)
பார்வை : 98

மேலே