என் காதல் வாழ்வு

என் எதிரே வந்து
நேருக்கு நேர் நின்று
என் நோக்குக்கு எதிர் நோக்கு நோக்கி
துணிந்து பேசினாள் கூர்விழிக் கண்ணால்
நான் வீழ்ந்துதான் போனேன்
காதல் கடலில்...
கண் இமை மூட மறுக்கின்றது
பெண்ணே உன்னால்...
என்னைக் கவர்ந்தக் கண்ணே!
தினம் குத்திக் கொல்லாதே - என்னை!
நான் துயிலும் வேளையில்
என் கனவில் வருகிறாய்...
தனித்து நான் விழித்திருக்கையில்
உன் நினைவைத் தருகிறாய்...
இருந்து வீணாய்...
உன் செவ்வாய் பொய் சொல்வது ஏனாம்?
மையிட்ட உன் விழியோ
தானாய் முன்வந்து மெய் சொல்லுதே!
அது போதும் அன்பே!
தேனாய் கவிதை உருகும்
இளம் கவிஞன் நெஞ்சில்!
எழில் பூ புன்னகை செய்கையில்
தேனீயாய் உன்னைச் சுற்றுமே என் மனம்!
தனியா(ய்) காதல் கொண்டு
தினம் தவிக்கிறேன் நான் இங்கு
உன் துணையாய் எனை நீ
ஏற்றுக் கொண்டு
இன்பமாய் நாம் சேர்ந்து
காலத்தைக் களிப்பது என்று?
விரைவில் விடியத்தான் போகுது
என் காதல் வாழ்வு!