எண்ணத்தில் துளிர்த்தவை 13

ஆராவரமில்லா சாலை
அரவமற்ற சூழ்நிலை
அமைதியின் வாயில் !
வெறியில்லா மனம்
நேசமுள்ள நெஞ்சம்
நட்புக்கு வழி !
பகையில்லா நிலை
பண்புள்ள உள்ளம்
உறவில் வலிமை !
புறம்பேசுவது தவிர்த்தல்
அறநெறிகள் காத்தல்
உள்ளங்கள் தூய்மை !
உதவிடும் நெஞ்சம்
உள்ளத்தில் தெளிவு
உள்ளங்கள் மகிழ்ச்சி !
பழனி குமார்