தினம் ஒரு தத்துவ பாட்டு - 23 = 156

“கண்ணில்படுவதை கவர நினைப்பது அறிவின்மை
கன்னிச்சிரிப்பதை காதலென்பது மடத்தன்மை
எண்ணிக்கொண்டதை எளிதில்முடிப்பது பேராண்மை
தண்ணீயடிப்பதை நிறுத்திவிட்டது நல்ல மனப்பாண்மை”

சொல்லிச்செல்வதை உடனே செய்வது செயல்வன்மை
அள்ளிக்கொடுப்பதை அளந்து கொடுப்பது குறையின்மை
கள்ளிச்செடியை களையெடுப்பது ஒன்றும் குற்றமின்மை
தள்ளிச்செல்பவரை விலகி நிற்பதால் பெரும்நன்மை

அவசரப்பட்டு முடிவு எடுப்பது அறிவுக்கு அழகின்மை
தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது பெருந்தன்மை
துட்டுக்கொடுத்து காரியம் முடிப்பது செயலின்மை
துட்டுப்பெற்று காரியம் முடிப்பது கொடும்பாண்மை

அடையாததை அடைந்ததாக அலட்டுவது அறனின்மை
முடியாததை முடித்ததாக மார்தட்டுவது முறையின்மை
பிடிக்காததை பிடித்ததாக பிதற்றுவது பற்றின்மை
படிக்காததை படித்ததாக பறையடிப்பது நெறியின்மை

எழுதியவர் : சாய்மாறன் (6-Jul-16, 5:01 pm)
பார்வை : 115

மேலே