ஐந்து முறை வரம்

சிவனை வணங்குவோர் கவனத்திற்கு,
பலமுறை சிவனை வணங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு பெண் தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று
பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்து தட­வைகள் “நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.

ஐந்தாம் முறை­யாக அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கண­வர்­களைப் பெறு­வா­யாக” என்று வர­ம­ரு­ளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென அருளிச் செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அரு­ளி­விட்டேன், அடுத்த பிற­வியில் நீ இந்த வரத்தின் படி கண­வர்­களைப் பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துரு­பதன் புத்­தி­ரி­யான திரெ­ள­ப­தை­யாவாள் என்று கூறி­மு­டித்தார் வியா­சக முனிவர்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (16-Jul-16, 11:13 pm)
பார்வை : 225

மேலே