கண்ணாலே செய்தி சொல்லி

கண்ணாலே
செய்தி
சொல்லி.....கண்முன்னே
மறைந்திடும்
மாயக்காரி....

ஊன் உறக்கம்
தொலைத்து
உன்நினைவில்
புலம்பவைத்த
சூனியக்காரி.....

தந்திரம்
மந்திரம்
கலந்து
கன்னத்தில்
முத்தம் பதித்து
சத்தமின்றி
யுத்தம்
செய்யும்....
வித்தைக்காரி.....

கோபம்
கொண்டும்
சிநேகம்
கொண்டும்.....
சிலநொடிகள்
வேதனைகள்
தந்து.....
வேடிக்கை
காட்டும்
காதலும்
காதலியும்
அவளே.....

உன்னை விட்டு
என்மனம்
மாறாது.....
இறந்தாலும்
என்னுள்
வாழும்..... இது
இறுமாப்பு
அல்ல.....இதயம்
சுமக்கும்
இமயம் கடந்த
காதல்......!!

எழுதியவர் : thampu (18-Jul-16, 2:39 am)
பார்வை : 136

மேலே